உண்ணா விரதம்
சுற்றம் காக்கவெண்ணி உற்றார் தனைமறந்து
அகிம்சா வழியில் அறநெறி தவறாது
ஆன்மாதனை வதைத்து உணவை விடுத்தெறிந்து
சுயமாகப் புரியும் உன்னத யாகம்
காந்தி காட்டிய வழியைப் பற்றி
புகலிடம் பெற்றதனில் புலிக்கொடியேற்ற எண்ணி
காவிய நாயகராய் திலீபனும் பூபதியும்
புரிந்தனர் உண்ணாநோன்பு ஈழத்தில் அன்று
நிதி வளம் செழித்து ஓங்க
அஜீரணம் வயிற்றை முறுக்கிப் பிழிய
நிதிகளும் விமல்களும் பிணி தீர்க்க
புரிகின்றனர் உண்ணும்நோன்பு உலகத்தில் இன்று
வடிப்பு :- சுக்கிரன்