கோலாலம்பூர்
வானளாவ கோபுரங்கள்
வான மலக்குகள் வந்து
வான்மழை தூவினாற் போல் – ஆங்கே
வண்ண வண்ண மின்குமிழ்கள்
கடுகளவும் சிந்திப்பின்றி
கடுகதியில் செல்லும் கார்கள்
கன்னியர்கள் காளையர்கள் பேதமின்றி
காற்சட்டையில் உலாவும் மனிதர்கள்
மணம் பரப்பும் குப்பைத்தொட்டிகள்
மானம் பறக்கும் காதலர்குடில்கள்
மலர்களை தூவும் கோயில்கள் – அருகே
மனிதரை தூவும் மயானங்கள்
மக்கள் தொகையில் பெரிதெனினும்
மனதளவில் சிறுத்துள்ள
மாக்கள் வசிக்கும் நகரம் – அதுவே
மாநரகம், கோலாலம்பூர் மாநகரம்
வடிப்பு :- சுக்கிரன்
பின்னூட்டமொன்றை இடுக