Archive for ஜூலை, 2010

உண்ணா விரதம்

ஜூலை 12, 2010

உண்ணா விரதம்

சுற்றம் காக்கவெண்ணி உற்றார் தனைமறந்து

அகிம்சா வழியில் அறநெறி தவறாது

ஆன்மாதனை வதைத்து உணவை விடுத்தெறிந்து

சுயமாகப் புரியும் உன்னத யாகம்


காந்தி காட்டிய வழியைப் பற்றி

புகலிடம் பெற்றதனில் புலிக்கொடியேற்ற எண்ணி

காவிய நாயகராய் திலீபனும் பூபதியும்

புரிந்தனர் உண்ணாநோன்பு ஈழத்தில் அன்று


நிதி வளம் செழித்து ஓங்க

அஜீரணம் வயிற்றை முறுக்கிப் பிழிய

நிதிகளும் விமல்களும் பிணி தீர்க்க

புரிகின்றனர் உண்ணும்நோன்பு உலகத்தில் இன்று



வடிப்பு :- சுக்கிரன்