என் மன(ண)ப் பெண்
சுருள் முடியும் – அதில்
சுருட்டி விட்ட கொண்டையும்
நீண்ட நெற்றி தனில்
நீல நிறப் பொட்டும்
காதினில் கம்மலும் – கீழே
கழுத்ததனில் கதம்ப மாலையும்
அவள் யார்? என்றேன்
அவளை யாசிக்கத் தொடங்கிவிட்டேன்
இரண்டு விழிகளிலும்
இரேடியத்தின் ஓளிர்வு
செந்நிற கன்னமதனில்
செரிப்பழத்தின் செழிப்பு
காதினில் லோலாக்கு
காதலை பெருக்கிவிட
மனதைத் தொலைத்துவிட்டு – அவள்
மனம் தேடி அலைகின்றேன்
சிவப்பு நிறச் சட்டை
சிந்திப்பைத் தூண்டுகிறது
நீல நிறப் பாவாடை
நினைவுகளை மீட்டுகிறது
அவள் புன்சிரிப்பு
அன்பே வா! என்கிறது
அவள் தனங்களின் அழகில்
அவளுக்காய் தவமிருக்கும் தவசியாய் மாறிவிட்டேன்
சிற்றிடையாள் – அவள்
சிறுநடையாள்
குளவி மொழியாள் – அவள்
குலாப்ஜமூனாய் இனிப்பாள்
காதலியே என்
கற்கண்டே – இல்லறம்
கரும்பாய் இனித்திட
காந்தர்வ மணம் புரிவோமா?
வடிப்பு :- சுக்கிரன்
7:18 பிப இல் பிப்ரவரி 1, 2009 |
nice poem ma, great!
6:12 பிப இல் பிப்ரவரி 2, 2009 |
good work