முதல் கவிதை

என் மன(ண)ப் பெண்

சுருள் முடியும் – அதில்

சுருட்டி விட்ட கொண்டையும்

நீண்ட நெற்றி தனில்

நீல நிறப் பொட்டும்

காதினில் கம்மலும் – கீழே

கழுத்ததனில் கதம்ப மாலையும்

அவள் யார்? என்றேன்

அவளை யாசிக்கத் தொடங்கிவிட்டேன்

 

இரண்டு விழிகளிலும்

இரேடியத்தின் ஓளிர்வு

செந்நிற கன்னமதனில்

செரிப்பழத்தின் செழிப்பு

காதினில் லோலாக்கு

காதலை பெருக்கிவிட

மனதைத் தொலைத்துவிட்டு – அவள்

மனம் தேடி அலைகின்றேன்

 

சிவப்பு நிறச் சட்டை

சிந்திப்பைத் தூண்டுகிறது

நீல நிறப் பாவாடை

நினைவுகளை மீட்டுகிறது

அவள் புன்சிரிப்பு

அன்பே வா! என்கிறது

அவள் தனங்களின் அழகில்

அவளுக்காய் தவமிருக்கும் தவசியாய் மாறிவிட்டேன்

 

சிற்றிடையாள் – அவள்

சிறுநடையாள்

குளவி மொழியாள் – அவள்

குலாப்ஜமூனாய் இனிப்பாள்

காதலியே என்

கற்கண்டே – இல்லறம்

கரும்பாய் இனித்திட

காந்தர்வ மணம் புரிவோமா?

                                                     வடிப்பு :- சுக்கிரன்

2 பதில்கள் to “முதல் கவிதை”

  1. phenix Says:

    nice poem ma, great!

  2. suresh Says:

    good work

பின்னூட்டமொன்றை இடுக