அகதி முகாம்
உயிர் பிழைக்க எண்ணித் தங்கள்
உயிர்களை கைப் பிடித்து
உறவுகள் நடந்தது – நல்ல
உறைவிடம் காண எண்ணி
காததுாரம் நடந்ததன் பின்
கால்கள் இளைப்பாற அமர்ந்தது
அந்நியனின் கால்தடத்தில் – அவர்களுக்காய்
அமைக்கப்பட்ட அகதி முகாம்
கால்களை தரையில் நீட்டி
கம்பத்தில் தலையை சாய்த்து
தாயக உணர்வுடன் – அவள்
தன் வாழ்க்கையை எண்ணினாள்
கதைப்பதை நிறுத்தியதில்லை, இங்கு
கதைப்பதற்கும் அனுமதி தேவை
காவலாளி இல்லை வீட்டில் – இங்கு
கழிப்பறைக்கும் கூட வருவான்
தனிமையாய் துாங்க எண்ணி
தனியறை கேட்டது அன்று
மண்டபத்தில் மக்கள் எல்லாம்
மந்தை போல் துாக்கம் இங்கு
எல்லை சற்று நகர்ந்து விட்டால்
மின்னலாய் சண்டை வெடிக்கும் – இங்கு
எல்லை தாண்ட முடியாது
மின்சாரம் உயிர் குடிக்கும்
மண்ணை விட்டு வந்ததனால்
மானம் இழந்தவள் ஆவேன் – நானோ
மண்ணில் இருந்திருந்தால்
மாவீரர் ஆயிருப்பேன்!
வடிப்பு :- சுக்கிரன்
12:05 பிப இல் பிப்ரவரி 22, 2009 |
good. keep it up
8:03 முப இல் பிப்ரவரி 23, 2009 |
<>
இதுக்கொண்டும் குறைச்சலில்லை நாட்டை விட்டு போன எல்லாரும் இதைத்தான் சொல்லுறது!!
5:38 முப இல் ஜூலை 12, 2010 |
good poem